ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதற்கும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கும் ஆலயங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன: டத்தோ சிவக்குமார்

அம்பாங்:

ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதற்கும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கும் ஆலயங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

அம்பாங்கில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மகா நாகேஸ்வரி காளியம்மன் ஆலயத்தின் 41ஆவது ஆண்டு திருவிழா இன்று நடைபெற்றது.

ஆலயத்  தலைவர் சரவணனின் அன்பான அழைப்பைத் தொடர்ந்து இந்த திருவிழாவில் கலந்து கொண்டேன்.

இந்த நிகழ்வு பக்தி, பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக இருந்தது. இது  ஆலயத்தின் பக்தர்களின் ஆசீர்வாதங்களாலும் உற்சாகத்தாலும் நிறைந்தது.

மேலும்  ஆலயத் தலைவர் சரவணனிடம் மஹிமா உறுப்பினர் சான்றிதழை வழங்கப்பட்டது.

இது மஹிமாவின் வளர்ந்து வரும் வலையமைப்பில் கோயில் சேர்க்கப்பட்டதைக் குறிக்கிறது.

மத, சமூக மேம்பாட்டு முயற்சிகளை வலுப்படுத்த மற்ற உறுப்பினர் கோயில்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான  ஆலயத்தின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

ஆன்மீக மரபுகளைப் பாதுகாப்பதற்கும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதற்கும் கோயிலின் அர்ப்பணிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்து சமூகத்தை கூட்டாக மேம்படுத்துவதற்கான மஹிமாவின் முயற்சிகளில் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'xsl.so' (tried: /opt/cpanel/ea-php72/root/usr/lib64/php/modules/xsl.so (/lib64/libxslt.so.1: undefined symbol: valuePush, version LIBXML2_2.4.30), /opt/cpanel/ea-php72/root/usr/lib64/php/modules/xsl.so.so (/opt/cpanel/ea-php72/root/usr/lib64/php/modules/xsl.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: